பொதிகை சாரல்



Sunday, October 7, 2012

தொடரும் சோகம்!

எது தீவிர வாதம் ,எது சுந்தந்திரப் போராட்டம் என்பதை 21  ஆம் நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாத படி இந்த உலகில் அரசியல் ஆட்சி செய்கிறது.அதற்க்கு கண்ணீர்த் தீவே சாட்சி!
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்றோ போன அந்த மக்களிடத்தில் சமீப காலத்தில் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை, இவ்வளவு ஏன் நம்பிக்கை மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை!

உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உயிர்கள் பிணங்களாக வாழும் இடத்தில், வலிகளை பொறுத்துக் கொண்டு பிணங்களை போல உயிர் வாழ்கின்ற மக்கள்.
ஒற்றுமை இல்லாது போனதால்,எதிர் காலமும் கேள்விக் குறியாய்ப் போன தேசிய இனம்!
யார் புரிந்து கொள்வார்கள்? யார் தீர்த்து வைப்பார்கள்? கேள்விகளே அதிகம்! இங்கே தொடரும் சோகம்!

Share/Bookmark

0 comments: