பொதிகை சாரல்



Saturday, September 29, 2012

தீண்டாமையில் ஏன் இவ்வளவு பித்தலாட்டம்?


   பிறப்பில் சிலர் உயர்ந்தவர் என்றும் , தாழ்ந்தவர் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?
கடவுளா என்றால் அதற்கும் சரியான தகவல் இல்லை .ஏன் என்றால் இங்கே கடவுளில் கூட இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்கிறதே ?
   கீழ் சாதிக்காரனை கோவிலுக்கு வர அனுமதிக்காத இந்த சமூகம் ,அவர்கள் தரும் காணிக்கையை மட்டும் அனுமதிப்பது எவ்வாறு?
தாழ்ந்த சாதிகாரனை உயர்ந்த பதவியில் அமர்த்திப் பார்க்காத இந்த சமூகம் ,அவனிடம் இருக்கும் வாக்குரிமைக்காக பிச்சை எடுப்பதை விட கேவலமாக நிற்கும்  போது எங்கே போனது இந்த சாதி ? ஏன் கூலி வேலைக்காக தாழ்ந்த சாதிகரனை பணிக்கு  அமர்த்த வேண்டும்?அப்பொழுது ஒட்டாதா அந்த சாதி?
என்ன இது வேடிக்கை ? ஏன் இந்த கீழ்த்தனம்?

    ஒன்று மட்டும் தெரிகிறது ,தனக்கு அடிமையாய் இருப்பவன் நாளை நமக்கு சரிசமமாக வரக்கூடாது என்ற கேவல எண்ணமே இந்த சாதியை உருவாக்கி இருக்கிறது ,பின்னாடி வரும் சந்ததி அதை தொடர்கிறது ?
உண்மையில் கீழ் சாதி எனப்படுபவன் , சாதி என்ற நோயால் பாதிக்கப் பட்ட மிருகம் !

Share/Bookmark

0 comments: